Saturday, September 5, 2015

Tuesday, May 18, 2010

கவிதை

சிறாராக,
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில் 
நம் தெருமுனை தொடுவது 
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன். 

கண்ணீருடன் நீ 
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.



தோற்ற என்னை 
சில நேரங்களில் 
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில் 
நீ விட்ட கண்ணீர்.

நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து




நம் திருமணத்தன்று இரவு
யாருக்கும் தெரியாமல்
உன் அறையில் 
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த 
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!

திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன் 
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின் 
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை 
எங்கேயும் கிடைக்கவில்லை!

தாலி கட்டிய போது
ஏன் அழுதாய் 
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும் 
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது




முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய 
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?

வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய் 
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?

நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.




மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த 
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள், 
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?

மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்? 



செல்ல மகள் திருமணம்,
கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள் 
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!

பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!



என்னை விட்டு 
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல 
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!


இன்று
தனியறையில் நான், 
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?

என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த 
மரணத்தால் 
அழிக்கமுடியவில்லை.

உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி 
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!


இந்த கவிதை மெயிலில் வந்தது.....

Thursday, January 28, 2010

எங்க வீடு இல்லவே இல்லை









Friday, January 8, 2010

BURJ KHALIFA, DUBAI---Inside Photos


















Wednesday, December 16, 2009

மன-நோய்கள் - சில உண்மைகள்

1. நம் நாட்டில் மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மனநோயினால் அவதியுற்று வருகிறோம்.

2. உடலைப் போன்றே மனமும் எப்பொழுது வேண்டுமானாலும் நோயுறலாம்.

3. தலைவலி, காய்ச்சல், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் போன்ற உடல் நோய்களைப் போலவே மனநோய்களும் எளிதில் குணப்படுத்தக் கூடியவை.

4. மனநோய்கள் பில்லி, சூனியம், ஏவல், கிரகங்கள் பதிப்பு அகியவற்றின் காரணமாக எற்படுவதில்லை.

5. மரபு வழி சாத்தியக் கூறுகள் மற்றும் மன உலைச்சல்கள் ஆகியன மூளையில் எற்படுகின்ற இரசாயன மாற்றங்களால் தான் மன நோய்கள் ஏற்படுகின்றன.

6. மந்திரம் செய்வது, திருநீர் போடுவது, கயிறு கட்டுவது, சாமியாரிடம் செல்வது தீவிர வழிபாடு மற்றும் கோவில்களில் சென்று தங்குவது ஆகியன மனநோயினை எந்த விதத்திலும் குணப்படுத்த உதவாது.

7. மனநோயின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து மருந்துக்கள் உட்கொள்ளுதல் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, மனோநோயாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களிடம் அன்போடும் அரவணைப்போடும் நடந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மனநோயாளிகளை எளிதில் குணப்படுத்தலாம்.

8. மனநோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வின்மை, ஆரம்ப நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்தல், தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளாமை, குடும்பத்தாரின் போதிய ஒத்துழைப்பின்மை, சமூகத்தின் எதிர்மறையான பார்வை ஆகிய காரணங்களால் தான் மனநோய்களை கையாளுவது கடினமாக உள்ளதே தவிர மற்றபடி மனநோய்களை போன்று முழுமையாக குணப்படுத்தக் கூடியவையே.

மனச்சோர்வு நோய் (Depression)

· மனக்கவலை

· அதிகாலை தூக்கமின்மை

· மிகுந்த சோர்வு

· பசியின்மை

· எடை குறைவு

· அடிக்கடி அழுதல்

· தன்னம்பிக்கையின்மை

· எதிலும் ஆர்வமின்மை

· அதிகமான குற்ற உணர்வு

· அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்

மனச்சிதைவு நோய் (Schizophrenia)

· தொடர் துக்கமின்மை

· தனக்கத்தானே பேசிக் கொள்ளுதல்

· தனக்கத்தனே சிரித்துக் கொள்ளுதல்

· காதில் மாயக்குரல்கள் கேட்டல்

· அதிகமாக சந்தேகப்படுதல்

· அவைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு

· சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான நம்பிக்கை

· உடல் தூய்மை படிப்படியாக் குறைதல்

மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)

· நெஞ்சு படபடப்பு

· கை நடுக்கம்

· அதிகமாக வியர்த்தல்

· நெஞ்சுவலி

· கவனம் செலுத்த இயலாமை

· தூக்க குறைவு

· அடிக்கடி எரிச்சல் அடைதல்

· எதிர்மறையான எண்ணங்கள்

பயம் நோய் (Phobia)

· தனிமையில் இருக்க பயம்

· கூட்டத்தினைக் கண்டுபயம்

· புதிய நபர்களை எதிர்கொள்ள பயம்

· உயரமான இடங்களுக்கு சென்றால் பயம்

· மூடிய இடங்களை கண்டு பயம்

· இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க நினைத்தும் இயலாத நிலை

எண்ணம் மற்றம் செயல் சுழற்சி நோய்

· திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவத, தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.

· ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது

· திரும்ப திரும்ப ஒரே செயலை செய்து கொண்டு இருப்பது

உதாரணமாக:

1. திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்

2. பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது

3. பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது

· ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.

· தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனபதற்றமும் ஏற்படுவது.

· குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.

ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)

· அடிக்கடி கோபம் கொள்ளுதல்

· குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்

· மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்

· உடல் உறுப்புகளை தானே காயப்படுத்திக் கொள்ளல்

· கலவரங்களில் ஈடுபடுதல்

· சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்

· மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்

· பெற்றோர்களுக்கு கீழ்படியாமை

· எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்

· எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்

பெண்களும் மனநோய்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக

· அதிக எரிச்சல்

· கோபம்

· சோர்வு

· பதற்றம்

இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.

கர்பிணி பெண்களும் மனநோய்களும்

· குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை

· அடிக்கடி அழுதல்

· தூக்கமின்மை

· பசியின்மை

· தற்கொலை எண்ணங்கள்

· தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்

முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்

· தொடர் தூக்கமின்மை

· மறதி

· பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்

· நாள், கிழமை மறந்து விடுவது

· உறவினர், நண்பர்களை மறந்து விடுவது

· அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது

· பசியின்மை

இதர மனநோய்கள்

· சாமியாட்டம்

· புகை பிடித்தல்

· மது அருந்துதல்

· கணவன் மனைவி பிரச்சனைகள்

· மனரீதியான பாலியல் பிரச்சினைகள்

குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்

· குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்

· படிப்பில் கவனம் குறைதல்

· அதிக கோபம் கொள்ளுதல்

· அடிக்கடி எரிச்சல் அடைதல்

· படுக்கையில் சிறுநீர் கழித்தல்

· மிக மிக அதிக சுறுசுறுப்போடு ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)

· கீழ்படியாமை

· அடிக்கடி பொய் சொல்வது

· திருடுவது

· குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)

· 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)

· மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)

· நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)

· குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Separation anxiety disorder)

இது எனக்கு வந்த மெயிலில் படித்தது .நிங்களும் படித்து உங்கள் ஓட்டை போட்டு கம்மேண்டயும் எழுதுங்கள் .

Sunday, December 13, 2009

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!


உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

முயற்சி பண்ணினா முடியாதது ஒண்ணுமில்லன்னு சொல்வாங்க இது எல்லாத்துக்கும் பொருந்துதோ இல்லையோ தொழில்நுட்பத்துக்கு கண்டிப்பா பொருந்தும்.

வளர்ந்து வர்ற தொழில்நுட்ப வளர்ச்சியில புதுசு புதுசா கண்டுபிடிப்புகளை தர்றது அறிவியலோட அதிசயமா இருக்கு.

அந்த வகையில முதல் முறையா மொபைல்ல "விண்டோஸ் எக்ஸ்பி" மென்பொருளை பயன்படுத்தி கிட்டதட்ட ஒரு லேப் டாப் மாதிரியே வர்ற மொபைல் தான் xp phone.

மொபைல் + லேப் டாப் + ஜி.பி.எஸ் இப்படி மூனையும் ஒரே சாதனத்துல அடக்கியிருக்காங்க...

இதோட சிறப்பம்சங்கள்னு பாத்தீங்கன்னா...

* 4.8' touch screen
* VGA output to 1920 * 1200 resolution
* Operating System: Microsoft Windows XP
* Support MSN/Skype/QQ free video calls
* Support more than 500 kinds of video/audio formats
* Ports:1 x earphone jack,1 x microphone jack,Docking Connector
(include VGA output signal ),1 x USB 2.0, SIM Slot
* Wireless:WiFi 802.11b/g,WiMax(optional),Buletooth,Stand-alone GPS

இது மட்டுமில்லாம இந்த போனுக்குன்னே அப்ளிகேஷேன்கள் தரவிறக்கம் செய்யிறதுக்கு xpmall இருக்கு அதிலேர்ந்து ஒரு கோடிக்கும் மேல அப்ளிகேஷேன்கள் நாம தரவிறக்கம் செய்யலாம்.

இப்படி இந்த போன் வசதிகளை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். சரி இத எந்த நாட்டு நிறுவனம் தரப்போகுதுன்னு நான் கேட்டால் உடனே நீங்க அமேரிக்கா, ஜப்பான்,கொரியான்னு போயிடாதீங்க, சீனாவை சேர்ந்த In Technology Group Limited (ITG அப்படிங்கிற நிறுவனம் தான் தரப்போகுது.

இன்னும் மார்கெட்டுக்கு இந்த போன் வரல ஆனா இப்பவே "ஆன்லைன்"ல ஆர்டர் பண்ணலாம்.அநேகமா இந்த போன் ஆப்பிள் போனுக்கு பலத்த போட்டியா வரும்போல.


FOR MORE DETAILS :
http://www.xpphone.com/en/product/functions.html

Monday, November 16, 2009

அனுபவம்



AIRTEL செய்யும் அநியாயம் தாங்க முடியவில்லை .அவர்களே நமக்கு ஒரு sms அனுப்புவார்கள் அதை திறந்து பார்த்தால் 10 பைசா கட்டணம் நம்ம பைசாவில் இருந்து களியும் இது தினம் வரும் .நம்ம பைசா களியும் .இந்த விவரம் தெரியவே கொஞ்ச நாள் ஆச்சு .இது எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வரும் .சர்விஸ் sms என்று ஒரு நாளைக்கு குறைந்தது 10 வரும் .எல்லோரும் ஆங்கிலம் தெரிந்தவர்களும் இல்லை .அப்புறம் உனக்கு பைசா போக்குதா ?என்னக்கு போகுது என்று கண்டுபிடுத்து கஸ்டமர் கேரில் சொல்லி சரிங்க மேடம் இனிவராது மேடம் சாரி மேடம் லவிக மேடம் என்று சொல்லி முடித்தான் .


எங்க மைனியார் போனுக்கு ஒரு சிம் வாங்கி போட்டோம் அதில்ல ar ரகுமான் ரிங் டோன் இவ வயசுக்கு இது தேவையா என்று நாங்க ஒர்த்தருக்கு ஒருத்தர் சொல்லி சிரிப்போம் அது 2 மாதத்திற்கு பிறக்கு தான் தெரியும் மாதம் 30 ரூபாய் அவுட் ன்னு .பழையபடி அவனுக்கு போன் போட்டு வேண்டாம் ஐயா ஆளவிடுன்னா மாச கடைசில்ல போன் போடுக்ங்க மேடம் ன்னா(மேடத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை )மாச கடைசில்ல போட்டு அதையும் நீக்கியாச்சு அப்புறம் அவன் sms அனுப்புறான் இனி போர் அடிக்கிற டோன கேட்டுட்டா இருங்க என்று .மேலும் கேளுங்க நல்ல நேரத்தில் போன் அடிக்கும் என் மருமவ சொல்லுவா மாமி போன எடுக்காதேங்க அவன்தான் போன் காரன் ஏதாவது ஒளருவான் அதையும் மீறி எடுத்தால் அவ சொன்ன மாதிரி அந்த ஆபர் இந்த அபிர்ந்னு ஏதாவது சொல்லுவான்

அப்புறம் என்ன அநியாயம் பார்த்தால் சொகாம் அதான் ஜோக் படுபாவி அணிப்பிட்டு ஒரு ரூபாய் முழங்கி விடுகிறான் .அதும் இங்கிலிபீஸ்ல எங்க அம்மா போனுக்கு இப்படி தினம் 4 அல்லது 5 இதையும் கண்டுபிடுத்து அவனுக்கு போன் போட்டா ஏலு எட்டு கேள்வி கேக்குறான் .யார்பேர்ல இருக்கு ? கடசியா எப்ப ரீசார்ஜ் பண்ணுன ? இந்த எழவெல்லாம் நெனவு வச்சிக்கவா நேரம் .
இவங்களுக்கு airtel போட பிடுசுக்கிட்டு நல்ல ஜன நடமாட்டம் உள்ள இடத்தில நின்ன ஜனங்க துட்டு போடுவாங்கல்லா ?

இவங்கள மாதிரி ஆளுங்க கிட்ட நல்ல உசாரா இருக்கணும் அல்லது நம்ம போனேயே அவங்கலோடதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க