Friday, April 3, 2009

சிந்தனை !!

பணம் படைத்தவர்கள் அதிகமாக கோயில் , பள்ளிவாசல் என்று உண்டியலை நிரப்புவார்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் தனது ரத்த பந்தங்கள் வறுமையிலோ அல்லது படிப்பு செலவுக்கோ பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் இவர்கள் கொடுத்து உதவமாட்டார்கள் .அவர்களுக்கு தெரியாதோ அதைவிட அதிக நன்மை இதில் உண்டென்று .

எனது வீட்டு பக்கத்தில் ஒருவர் வசதி படைத்தவர் மனைவியிடம் வெளியில் போகும் போது சொல்லிவிட்டு போவார் இப்படி! எந்த ஆன்மிகவாதி வந்து ஆண்டவன் பெயரில் பணம் கேட்டாலும் கொடுக்காதே எல்லாரும் ஏமாத்து காரப்பயளுவ என்று . சொல்லி விட்டு போய்ட்டார் அந்த அம்மாவும் யார் வந்து பணம் கேட்டாலும் கொடுக்காது .

ஒரு நாள் ஒருவர் அவரிடமே வந்து நாங்கள் மதம் சார்பாக பொதுகூட்டம் நடத்த போகிறோம் முடிந்த அளவு நிதி தாருங்கள் என்று கேட்டார் .வந்து கேட்டவரை இவருக்கு ஏற்கனவே தெரியும்
நான் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பாவங்களுக்கு என்று கொடுக்குறேன் அதனால் கூட்டத்துக்கு பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார் .வந்தவரும் விடுவதாக இல்லை .
நீ எப்போது வந்து கேட்டாலும் பணம் தருவதில்லை உனக்கு சொர்கம் நரகம் என்ற பயம் இல்லையா என்று கேட்டார் அவரும் விடுவதாக இல்லை பதிலுக்கு சொன்னார்

நரகத்துக்கே ஒருவேளை நான் போறதாக இருந்தாலும் நான் மட்டும் போகமாட்டேன் என்னுடன் மேலும் ஆட்கள் எப்படியிம் வருவார்கள் அவர்களுடன் நானும் ஒருவனாக இருந்துகொள்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .
இது உண்மையில் நடந்த சம்பவம்.

ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது.

மறக்காமல் ஓட்டை போட்டுவிட்டு பின்னூட்டம் இடுங்கள் .